அண்மைய செய்திகள்

recent
-

இந்தியப்பிரஜைகள் இருவர் மன்னாரில் கைது

மன்னார் பஸ் தரிப்பிடம் மற்றும் சிலாவத்துறை பகுதியில் சட்டவிரோதமான முறையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்தியப்பிரஜைகள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

 சுற்றுலா விஸாவில் வருகைதந்திருந்த இருவரே இவ்வாறு சட்டவிரோதமான முறையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

 மன்னார் பஸ் நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டவருக்கு 71 வயது என்றும் சிலாவத்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டவருக்கு 45 வயது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

 நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட இவ்விருவரையும் இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தியப்பிரஜைகள் இருவர் மன்னாரில் கைது Reviewed by Admin on December 17, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.