அண்மைய செய்திகள்

recent
-

2014 வரவு- செலவு திட்டத்தால் பெண்கள் பெரிதும் பாதிப்பு :றோஸி எம்.பி

2014 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டம் சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்தும் ஒரு முயற்சியாகும் எனக் கூறிய ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் றோஸி சேனநாயக்கஇ இந்த வரவு-செலவு திட்டத்தால் இலங்கையிலுள்ள பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று கூறினார்.


வரவு-செலவு திட்டம் வெளிநாட்டிலும் அரசதுறையிலும் வேலைசெய்யும் பெண்களை உதாசினம் செய்துள்ளது என றோஸி சேனநாயக்க கூறினார்.

அரசாங்கம் இந்த பெண்களில் கூடிய கவனம் செலுத்தியிருக்க வேண்டும். மேலும் இவர்களின் குடும்ப புலன்களை மேம்படுத்தும் ஏற்பாடுகளையும் செய்திருக்க வேண்டும் என அவர் கூறினார்.

வெளிநாடுகளுக்கு வேலைக்கு போகும் பெண்களின் குடும்பங்களை பராமரிக்க யாரும் இருப்பதில்லை. இவர்களின் பிள்ளைகளையும் இந்த வரவு-செலவு திட்டம் பூரணமாக உதாசீனம் செய்துள்ளது என றோஸி சேனநாயக்க கூறினார்.
2014 வரவு- செலவு திட்டத்தால் பெண்கள் பெரிதும் பாதிப்பு :றோஸி எம்.பி Reviewed by Author on December 05, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.