மன்னார் திருக்கேதிஸ்வரத்தில் உள்ள மனித புதை குழி மன்னார் நீதவான் முன்னிலையில் 7 ஆவது தடவையாக நாளை மீண்டும் தோண்டப்படவுள்ளது
மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் இது வரை 32 மனித எழும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக மீண்டும் நாளை வியாழக்கிழமை (16-01-2013) காலை முதல் குறித்த பகுதியில் உள்ள மனித புதைகுழி தோண்டப்படவுள்ளது.
மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்திய ரெட்ண ஆகியோர் முன்னிலையில் 6 ஆவது தடவையாக கடந்த 7 ஆம் திகதி காலை 8 மணிமுதல் மாலை 2.30 மணிவரை குறித்த மனித புதைகுழி தோண்டப்பட்டு மனித எலும்புக்கூடுகள்; மீட்கப்பட்டது.
இதன் போது மீட்கப்பட்டிருந்த 6 மனித எலும்புக்கூடுகளில் ஒரு எழும்புக்கூட்டில் உள்ள கைப்பகுதியில் ‘தாயத்து’ ஒன்று கட்டப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது வரை மீட்கப்பட்டுள்ள 32 மனித எலும்புக்கூடுகள்; முழுமையாகவும்,சில மனித எழும்புக்கூடுகள் துண்டு துண்டுகளாகவும் உள்ளது.
அப்பகுதியில் மேலும் மனித எலும்புக்கூடுகள் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் அருகில் உள்ள காட்டு மரங்களும் தற்போது வெட்டப்பட்டு வருகின்றது. மீண்டும் நாளை 16 ஆம் திகதி வியாழக்கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் மனித புதை குழி தோண்டப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் திருக்கேதிஸ்வரத்தில் உள்ள மனித புதை குழி மன்னார் நீதவான் முன்னிலையில் 7 ஆவது தடவையாக நாளை மீண்டும் தோண்டப்படவுள்ளது
Reviewed by Admin
on
January 15, 2014
Rating:

No comments:
Post a Comment