முல்லைத்தீவு கடலில் தத்தளித்த ஆஸி. பிரஜைகள் இருவர் காப்பாற்றப்பட்டனர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் சாலை கடற்பரப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை சிறிய படகொன்றில் தத்தளித்துக்கொண்டிருந்த அவுஸ்திரேலியப் பிரஜைகள் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
காப்பாற்றப்பட்ட இருவரும் ஆரோக்கியமாக உள்ளனர்.
இது தொடர்பில் கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு தகவல் தெரிவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் கூறியுள்ளது.
கடற்படையினரால் காப்பற்றப்பட்ட அவுஸ்திரேலியப் பிரஜைகள் இருவரும் முல்லைத்தீவுப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்தார்.
வடபகுதியில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையை அறியாமல் இவர்கள் கடலுக்குச் சென்றிருக்கலாம் எனவும்; இதனாலேயே இவர்களின் படகு காற்றில் சிக்கியிருக்கலாம் எனவும் அவர் கூறினார்.
இவர்களிடம் முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு கடலில் தத்தளித்த ஆஸி. பிரஜைகள் இருவர் காப்பாற்றப்பட்டனர்
Reviewed by Admin
on
January 05, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment