திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி தொடர்பான விபரங்களும் ஜெனீவா மனித உரிமைச் சபைக்கு –
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான விபரங்களை ஜெனீவா மனித உரிமைச் சபைக்கு கொழும்பில் உள்ள மனித உரிமை அமைப்பு ஒன்று அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இதுவரை 32 மனித எழும்புக்கூடுகளும் பல மனித எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றும் இது தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் உரிய முறையில் நடத்துமென எதிர்பார்க்க முடியாது என்றும் அந்த மனித உரிமைகள் அமைப்பு எடுத்துக் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
யுத்தகாலத்தில் பலர் காணமல்போயும் கடத்தப்பட்டும் இருந்தனர்.
ஆவர்களில் ஒரு சிலரை தவிர ஏனையோர் வீடுதிரும்பவில்லை. திருக்கேதீஸ்வரத்தில் எடுக்கப்பட்ட மனித எழும்புக்கூடுகள் எந்தக் காலத்துக்கு உரியவை என இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் இது தொடர்பாக சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்றும் குறித்த மனித உரிமை அமைப்பு ஜெனீவா மனித உரிமைச் சபைக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி தொடர்பான விபரங்களும் ஜெனீவா மனித உரிமைச் சபைக்கு –
Reviewed by Admin
on
January 12, 2014
Rating:

No comments:
Post a Comment