தமிழுக்கும் சிங்களத்துக்கும் சம உரிமை வழங்க வேண்டும். அமைச்சர் வாசுதேவ நாணயக்கார.
தமிழ் , சிங்களம் ஆகிய இரு மொழிகளும் இலங்கையில் தாய்மொழிகளாகக்
காணப்படுகின்றன . எனவே இரண்டு மொழிகளுக்கும் சமமான உரிமையை நாம் வழங்க வேண்டும் .
எமது தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு இதுவே அவசியம் . இவ்வாறு தெரிவித்தார் . தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார .
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப் பாட்டு அமைச்சு மற்றும் யாழ் . மாவட்ட செயலகம் ஆகியன இணைந்து நடத்திய 2014 ஆண்டுக்கான தைப் பொங்கல் விழா நேற்று நல்லூர் ஆலய முன்றலில் நடைபெற்றது .
விழாவுக்கு வருகை தந்த விருந்தினர்கள் பாரம்பரிய கிராமிய நடனத்துடன் நல்லூர் நடராஜா பரமேஸ்வரி மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டதைக் தொடர்ந்து மண்டபத்தில் கலை நிகழ்வுகள் இடம் பெற்றன .
இந்த நிகழ்வில் அவர் உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்தார் . அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது :
நாட்டின் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் நிகழ்வுகளாக இவ்வாறான நிகழ்வுகள் கொண்டாடப் படுகின்றன . இதன் மூலம் அவர்களுடைய பாரம்பரிய , கலாசாரங்கள் வெளிப்படுத்தப் படுவதுடன் இனங்களுக்கிடையில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியும் .
வட பகுதியிலும் , தென்பகுதியிலும் இருக்கக் கூடிய கலாசாரங் களுக்கிடையிலான வேறுபாடு கிடையாது . மொழிகள் மாற்றாக இருந்தாலும் அவை இரண்டும் தாய் மொழி யாகக் கொள்ளப்படுகின்றன . இரண்டு மொழிகளுக்கும் சமமான உரிமை உள்ளது .
எங்களுடைய வரலாறு , பாரம் பரியக் கலாசாரம் என்பவற்றைக் கொண்டே நாம் வாழ் கின்றோம் . மாவட்ட ரீதியாக அந்தந்த கலாசாரங்களுக்கு ஏற்ப நிகழ்வுகள் நடத்தப்படு கின்றன .
யாழ்ப்பாணத்தின் கலாசாரத்துக்கு அமைவாக தைப்பொங்கல் விழா இங்கு கொண்டாடப்படுகின்றது . இதன் ஊடாக நாம் எமது ஒருமைப்பாட்டினை வெளிப்படுத்துவோம் என்றார் .
தமிழுக்கும் சிங்களத்துக்கும் சம உரிமை வழங்க வேண்டும். அமைச்சர் வாசுதேவ நாணயக்கார.
Reviewed by NEWMANNAR
on
January 20, 2014
Rating:

No comments:
Post a Comment