அண்மைய செய்திகள்

recent
-

யாழ்,மன்னார் ஆயர்கள் மனிதநேயமிக்க பண்பாளர்கள் : இராதாகிருஷ்ணன்

யுத்த காலத்தில் பல நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தியில் மக்­க­ளுக்­காக அர்ப்­ப­ணிப்­புடன் சேவை­யாற்­றிய மனித நேயம் கொண்ட யாழ்., மன்னார் ஆயர்­களை கைது செய்ய வேண்­டு­மென இரா­வணா சக்தி அமைப்பு தெரி­வித்­துள்ள கருத்­தா­னது வியப்­ப­ளிப்­ப­தோடு கிறிஸ்­த­வர்­களின் மனதைப் புண்­ப­டுத்தும் கருத்­தா­கு­மென முன்னாள் பிர­தி­ய­மைச்­சரும் இ.தொ.கா. உப­த­லை­வ­ரு­மான பெ. இரா­தா­கி­ருஷ்ணன் தெரி­வித்தார்.

இனங்­க­ளி­டையே தேசிய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் திட்­டங்­களை இரா­வணா சக்தி முன்­னெ­டுக்க வேண்­டுமே தவிர இனக்­கு­ரோ­தத்தை ஏற்­ப­டுத்தும் திட்­டங்­களை கைவிட வேண்­டு­மென்றும் அவர் தெரி­வித்­துள்ளார். இது தொடர்­பாக இ.தொ.கா. உப­த­லைவர் இரா­தா­கி­ருஷ்ணன் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது;

பெரு­ம­திப்­பிற்­கு­ரிய யாழ். ஆயர் தோமஸ் செளந்­த­ர­நா­யகம் மற்றும் மன்னார் ஆயர் இரா­யப்பு ஜோசப் ஆகியோர் யுத்தம் நடை­பெற்ற காலத்தில் தமது உயி­ரையும் துச்­ச­மென மதித்து மக்­க­ளுக்கு சேவை செய்­தனர். தம்மால் முடிந்­த­ளவு மக்­களைப் பாது­காத்­தனர். உணவு வழங்­கினர். இன்று யுத்தம் மு-டிந்த பின்­னரும் ஆயர்­களின் மனி­த­நேயப் பணிகள் தொடர்ந்த வண்­ணமே உள்­ளன. மக்­க­ளுக்­காக குரல் கொடுக்­கின்­றனர்.

இதனை எவ­ராலும் மறுக்க முடி­யாது.
ஆயர்­களின் சேவை­க­ளுக்கு இன­வாத சாயம் பூசி அவர்­களைக் கைது செய்ய வேண்­டு­மென இரா­வணா சக்தி அமைப்பு கூறு­வது வியப்­ப­ளிப்­ப­தோடு கிறிஸ்­த­வர்கள் உட்­பட மனி­த­நேயம் கொண்ட அனை­வர்­க­ளது மனங்­க­ளையும் புண்­ப­டுத்­தி­யுள்­ளது.

இவ்­வாறு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி நாட்டில் இன­வாதம், மத­வாதம் தலை­தூக்கி இனங்­க­ளி­டையே தேசிய நல்­லி­ணக்­கத்­தி­லான சந்­தர்ப்­பங்­க­ளிற்­கான கத­வு­களை மூடும் நட­வ­டிக்­கை­களை இவ்­வ­மைப்பு கைவிட வேண்டும். மாறாக புத்த பகவான் போதித்த அஹிம்­சை­யைக்­கை­யி­லெ­டுத்து நாட்டில் இனங்கள், மதங்­க­ளி­டையே நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் அனைத்து மக்­களும் சமத்­து­வ­மாக, சமா­தா­ன­மாக வாழ்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்னெடுக்க வேண்டும். அன்பு செய்வதன் மூலமே பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்ற புத்த பகவானின் போதனைகள் இராவணா சக்தி அமைப்புக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் பெ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ்,மன்னார் ஆயர்கள் மனிதநேயமிக்க பண்பாளர்கள் : இராதாகிருஷ்ணன் Reviewed by NEWMANNAR on January 20, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.