அண்மைய செய்திகள்

recent
-

இலங்­கையில் புகைத்தலால் நாளொன்றுக்கு 60 பேர் உயிரிழக்கின்றனர்

இலங்­கையில் புகைத்­த­லினால் மாத்­திரம் ஒரு நாளைக்கு 60 பேர் உயி­ரி­ழப்­ப­துடன் வருடமொன்றில் 20 ஆயிரம் பேர­ளவில் உயி­ரி­ழப்­ப­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இதே­வேளை, நாடு தழு­விய ரீதியில் கடந்த வருடம் 9 சத­வீ­தத்­தினால் புகைப்­ப­வர்­களின் எண்­ணிக்கை குறை­வ­டைந்­துள்­ள­தா­கவும் அமைச்சு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

சுகா­தார அமைச்சின் அதி­கா­ரி­யொ­ருவர் கேச­ரிக்கு மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்
இலங்­கையில் நாடு தழு­விய ரீதியில் ஒரு நாளைக்கு ஆயிரம் பேர­ளவில் வெவ்­வேறு நோய்களினால் உயி­ரி­ழக்­கின்­றனர். அவற்றில் 60 சத­வீ­த­மா­ன­வர்கள் அதா­வது 600பேர­ளவில் எச்.டீ. நோயினால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் என இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர். குறித்த எச்.டீ. நோயா­ளி­களில் 6சத­வீ­மான நோயா­ளிகள் புகைத்­த­லினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளென்­பது தெரிய வந்­துள்­ளது. அதா­வது சுமார் 60பேர் புகைத்­த­லினால் ஒரு நாளுக்கு உயி­ரி­ழக்­கின்­றனர்.

இதே­வேளை புகைத்­த­லி­னால ஒரு வரு­டத்­திற்கு 20,000 பேர் உயி­ரி­ழக்­கின்­றனர். ஆகவே, எச்.டீ நோயென்­பது புலன் உணர்வு குறைவு மற்றும் மர­பணு சம்­பந்­தப்­பட்ட விட­யங்­க­ளினால் ஏற்­ப­டு­கின்ற நோயாகக் காணப்­ப­டு­கி­றது. இத­ன­டிப்­ப­டையில் புகைப்­ப­வர்­களும் குறித்த நோயிற்கு இலக்­கா­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

அத்­தோடு கடந்த வருடம் சிகரெட் புகைப்­ப­வர்­களின் எண்ணிக்கை 9சத­வீ­த­மாக குறை­வ­டைந்­துள்­ளது மேலும், கடந்த வருடம் ஆகஸ்ட் மாத­ம­ளவில் 7 சத­வீ­த­ம­ளவில் புகைப்­ப­வர்­களின் எண்­ணிக்கை குறை­வ­டைந்­துள்ள நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாத­ம­ளவில் அச்­ச­த­வீதம் 9 சத­வீ­த­மாக காணப்­ப­டு­கின்­றமை விசேட அம்­ச­மாகும்.

கடந்த வருடம் நவம்பர் மாத­ம­ளவில் சிகரெட் ஒன்றின் விலை 30 ரூபா­வாக அதி­க­ரிக்­கப்­பட்­ட­மையே அதன் பிர­தான காரணம் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இருப்­பினும் சிக­ரெட்டின் விலை அதி­க­ரிக்­கப்­பட்ட பின்­பும்­கூட புகைப்­ப­வர்கள் சிக­ரெட்டை விட்டு விடு­வ­தாகத் தெரி­ய­வில்லை.

இந்­நி­லையில் சிக­ரெட்டை இளை­ஞர்­க­ளை­விட வயோ­தி­பர்­களே அதி­க­மாக புகைக்­கின்­றனர். எனினும்இதற்­போ­தைய சின்­னஞ்­சி­றார்கள் பாட­சா­லை­யில்­கூட சிகரெட் புகைக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது. அது மாத்­தி­ர­மின்றி மேலத்தேய பெண்­க­ளைப்போல் இலங்­கையில் வாழும் பெண்கள் கூட புகைத்தலில் ஈடுபட்டு வரும் நிலை காணப்படுகின்றமை துரதிர்ஷ் டவசமானது.

எனவே, சிகரெட் புகைப்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கமாகும். ஆகையால் சிகரெட் புகைப்பவர்கள் புகை த்தலை நிறுத்த வேண்டுமென்பதே சுகாதார அமைச்சின் வேண்டுகோளாக உள்ளது.

இலங்­கையில் புகைத்தலால் நாளொன்றுக்கு 60 பேர் உயிரிழக்கின்றனர் Reviewed by NEWMANNAR on January 30, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.