இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் மூன்றாம் கட்டமாக 273 வீடுகள். துணுக்காய் பிரதேசத்தில் அமைப்பு.
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள நான்கு கிராம அலுவலர்
பிரிவுகளில் இந்திய வீட்டுத் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள கிராமங்களில் இந்திய அரசின் நிதியுதவியுடன் வீட்டுத்திட்டப் பணிகள் இரு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது மூன்றாம் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன .
கடந்த ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட மூன்றாம் கட்டத்தில் 273 வீடுகளின் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .
துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள கோட்டைகட்டியகுளம் கிராம அலுவலர் பிரிவில் 37 வீடுகளும் , அணிஞ்சியன்குளம் கிராம அலுவலர் பிரிவில் 118 வீடுகளும் , கல்விளான் கிராம அலுவலர் பிரிவில் 60 வீடுகளும் , யோகபுரம் மத்தி கிராம அலுவலர் பிரிவில் 58 வீடுகளுமாக 273 வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன .
இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் மூன்றாம் கட்டமாக 273 வீடுகள். துணுக்காய் பிரதேசத்தில் அமைப்பு.
Reviewed by NEWMANNAR
on
January 16, 2014
Rating:

No comments:
Post a Comment