அண்மைய செய்திகள்

recent
-

புதிய வருட ஆராதனைகள் ஆயர் அவர்களின் இறை ஆசியுடன்

புது வருட ஆராதனைகள் நேற்று மாலை 11.45மணியளவில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்றது.

குறித்த ஆராதனை மன்னார் மறைமாவட்ட ஆயர் வண.இராயப்பு ஜோசப் தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்பு கொடுக்கப்பட்டது.

இவ் புது வருட ஆராதனைகளை அருட்தந்தை பெப்பிசோசை,அருட்தந்தை இராயப்பு, அருட்தந்தை ரெறன்ஸ், அருட்தந்தை யேசுராஜன் சில்வா ஆகியோர் வண. ஆயருடன் இணைந்து ஒப்பு கொடுத்தனர்.

குறித்த ஆராதனையின் போது மேதகு ஆயர் வண. இராயப்பு ஜோசப் ஆண்டகை மறை உரையாற்றினார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட இறைபக்தர்கள் குறித்த ஆராதனையில் கலந்து கொண்டு மறைஉரையினை பக்தியோடு கேட்டுக்கொண்டு புதிய வருடத்தில் இறைவனின் ஆசியினை பெறுவதற்காக பக்தியோடு ஆராதனைகளில் கலந்து கொண்டனர்.

ஆராதனை நிறைவின் போது ஆயர் அவர்களினால்  இறை ஆசிர்வாதம் இறைபக்தர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.





































புதிய வருட ஆராதனைகள் ஆயர் அவர்களின் இறை ஆசியுடன் Reviewed by Author on January 01, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.