கமலேந்திரனின் பாதுகாப்பு குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவு
.jpg)
அத்துடன் இந்த கொலைக்குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த மூவரையும் கைது செய்த பொலிஸார் கடந்த டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது அவர்களை நேற்று 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் வடமாகாண சபை அமர்வுகளுக்கு கமலேந்திரன் செல்வதற்கு அனுமதி கோரி வழங்கறிஞர் முடியப்பு றெமீடியஸ் நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.
யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் எச்.ஏ.சி. பெரேராவின் அனுமதியுடன் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் எதிர்க்கவில்லை.
இதனையடுத்தே வடமாகாண சபை அமர்வுகளுக்கு கமலேந்திரன் செல்வதற்கான பாதுகாப்பு தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்கும் படியும் பொலிஸ், குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் யாழ். சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டார்.
கமலேந்திரனின் பாதுகாப்பு குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவு
Reviewed by Author
on
January 10, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment