செட்டிக்குளம் ஆற்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு
புத்தளம் - மன்னார் வீதி செட்டிக்குளம் ஆற்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த (08) கண்டெடுக்கப்பட்ட குறித்த சடலம் சில நாட்களாக நீரில் இருந்ததால் அடையாளம் காண முடியாதபடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் சுமார் 50 அல்லது 55 வயது மதிக்கத்தக்க 5 அடி 6 அங்குலம் உயரமுடைய ஒருவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சடலம் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செட்டிக்குளம் ஆற்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு
Reviewed by Author
on
January 10, 2014
Rating:
Reviewed by Author
on
January 10, 2014
Rating:

No comments:
Post a Comment