மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதை குழியில் இருந்து இன்று மேலும் 2 எலும்புக்கூடுகள் கண்டபிடிப்பு
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி மீண்டும் இன்று புதன்கிழமை(29-01-2014) மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் முன்னிலையில் 17 ஆவது தடவையாக தோண்டப்பட்ட போது மேலும் 2 மனித எலும்புக்கூடு உள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை 8:30 மணியிலிருந்து பகல் 1 மணிவரை குறித்த எச்சங்களை தேடும் பணி மன்னார் மாவட்ட நீதிபதி செல்வி ஆனந்தி கனகரெட்ணம் முன்நிலையில் நடைபெற்றப்போதே குறித்த இரண்டு எலும்புக்கூடுகளிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று அனுராதபுர சட்ட வைத்திய அதிகாரி டி.எல்.வைத்தியரெட்ண தலைடையிலான குழு குறித்த பகுதியிற்கு சமூகமளித்திருக்காத நிலையில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் குறித்த பகுதியிலிருந்து பகுப்பாய்விற்கென எடுக்கப்படவில்லை.
இதேவேளை திருக்கேதீஸ்வரம் மனித புதை குழி உள்ள இடத்திற்கு வருகை தந்த குற்ற புலனாய்வுப்பிரிவினர் (சி.ஐ.டி) 5ஆவது நாளாகவும் இன்று புதன்கிழமை தமது விசாரனைகளை அங்கு முன்னெடுத்துள்ளனர்.
மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக மன்னார் பொது வைத்தியசாலையில் பாதுகாப்பான இடம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை வரை 16 பெட்டிகளில் 18 எலுமு;புக்கூடுகள் பொதி செய்யப்பட்டு வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்ட இடத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
மீண்டும் நாளை (30-01-2014) வியாழக்கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் குறித்த பணிகள் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதை குழியில் இருந்து இன்று மேலும் 2 எலும்புக்கூடுகள் கண்டபிடிப்பு
Reviewed by Author
on
January 29, 2014
Rating:
No comments:
Post a Comment