அண்மைய செய்திகள்

recent
-

திருக்கேதீஸ்வரத்தில் இதுவரை 39 எலும்புக்கூடுகளும் மனித எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்தப் பகுதி இன்று விஸ்தரிப்பு -படங்கள்

மன்னார் திருக்கேதீஸ்வரப் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழியை ஒன்பதாவது தடவையாக கடந்த 18.01.2014 சனிக்கிழமை அன்று மனித எச்சங்களை தேடி கண்டறியும் பணி நடைபெற்றபோது இரண்டு மண்டை ஓடுகளும் மற்றும் சில மனித எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டது.              

இதனை அடுத்து கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புக் கூட்டின் தொகை முப்பத்தொன்பதாக அதிகரித்துள்ளதுடன் மேலும் சில மனித எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டது.

இன்நிலையில் குறித்த பகுதியிலிருந்து மேலும் சில மனித எச்சங்கள் கணப்படுவதை அவதானித்த நிலையில் குறித்த மனித எச்சங்களுள்ள பகுதியை சற்று விஸ்தரிக்கும் பணி மன்னார் மாவட்ட நீதிபதி செல்வி ஆனந்தி கனகரெட்ணம் முன்நிலையில் நேற்றுதிங்கழ்கிழமை காலை 8:30 முதல் பகல் 1மணிவரை  நடைபெற்றது.


இதனை அடுத்து இன்று மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதிபதி செல்வி ஆனந்தி கனகரெட்ணம் அவர்களின் உத்தரவிற்கு அமைவாக குறித்த பகுதியில் மனித எச்சங்களை தேடி கண்டறியும் அகழ்வு வேலைகளுக்கென வீதி மேலும் பெக்கோ மூலம் உடைக்கப்பட்டு விஸ்தரிக்கப்பட்டது.

இன்நிலையில் மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிற்கு அமைவாக இன்று செவ்வாய்க்கிழமை குறித்த மனித எச்சங்களை கண்டறியும் பணி நடைபெறவுள்ளது




.




திருக்கேதீஸ்வரத்தில் இதுவரை 39 எலும்புக்கூடுகளும் மனித எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்தப் பகுதி இன்று விஸ்தரிப்பு -படங்கள் Reviewed by Author on January 21, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.