அண்மைய செய்திகள்

recent
-

சிவராத்திரியை முன்னிட்டு மன்னார் மனித புதைகுழியின் அகழ்வுப் பணி ஒத்திவைப்பு

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள மனித புதைகுழியிலிருந்து இன்றும் இரண்டு மண்டையோடுகள் மீட்கப்பட்டுள்ளன.

இன்று 31 ஆவது நாளாகவும் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


இந்த மனித புதைக்குழியில் இருந்து மண்டையோடுகளும், எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன.

திருக்கேதீஸ்வரம் பகுதியில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் நீர் குழாய் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களால் இந்த புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் இந்த மனித புதைக்குழியில் புதைக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை.

இதேவேளை மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 27 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு மார்ச் 5 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சிவராத்திரியை முன்னிட்டு மன்னார் மனித புதைகுழியின் அகழ்வுப் பணி ஒத்திவைப்பு Reviewed by NEWMANNAR on February 24, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.