அண்மைய செய்திகள்

recent
-

புத்தளம்-மன்னார் வீதியில் பாரிய விபத்து இருவர் மரணம்-படங்கள்

புத்தளம்-மன்னார் வீதியில் சமகிகம பிரதேசத்தில்  நேற்று   மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக வண்ணாத்த வில்லு பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த விபத்தையடுத்து மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கி வெடித்து தீப்பற்றிக் கொண்டதில் அந்த தீயில் விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனமும் தீப்பற்றிக் கொண்டுள்ளது. 

இவ்விபத்தில் வண்ணாத்த வில்லு பிரதேசத்தைச் சேர்ந்த சாமிநாதன் நந்தகுமார் (வயது 29) என்ற ஒரு பிள்ளையின் தந்தையும், அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஏ. எம். அசங்க பண்டார (வயது 18) என்ற இளைஞரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இவர்களது பிரேதங்கள் புத்தளம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. 

இவ்விருவரும் மன்னார் வீதியில் பத்தாம் கட்டைப் பிரதேசத்தில் வாகன சேர்விலஸ் நிலையம் நடாத்தி வந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தையடுத்து தீப்பற்றிக் கொண்ட டிப்பர் வாகனத்தை பிரதேசவாசிகளும், பொலிஸாரும் இணைந்து தீயை அணைத்துள்ளனர். 

இவ்விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் வண்ணாத்தவில்லு பொலிஸார் டிப்பர் வாகன சாரதியைக் கைது செய்துள்ளனர்.







புத்தளம்-மன்னார் வீதியில் பாரிய விபத்து இருவர் மரணம்-படங்கள் Reviewed by NEWMANNAR on February 10, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.