திருக்கேதீஸ்வர புதைகுழியின் எலும்புக்கூடுகளிண் எண்ணிக்கை 57ஆக உயர்வு
இன்று மீண்டும் திருக்கேதீஸ்வர புதைகுழி அகழ்வுவேலைகள் ஆரம்பிக்கப்படடதுஇன்று 20வது தடவையாக மனித புதைகுழி அகழ்வு வேலைகள் நடைபெற்றப்போது மேலும் மூன்று எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் கண்டுப் பிடிக்கப்பட்ட மனித புதை குழி அகழ்வு கடந்த மாதம் இறுதியில் இடை நிறுத்திய நிலையில்; இன்று திங்கள் கிழமை (10.2.14) மீண்டும் ஆரம்பபிக்கப்படது.
இன்று மன்னார் மாவட்ட நிதிமன்ற நீதிபதி செல்வி ஆனந்தி கனகரெட்ணம் முன்நிலையில் அனுராதபுர சட்டவைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ண தலைமையிலாக குழுவின் பங்குபற்றுதலுடன் 20வது தடவையாக திருக்கேதீஸ்வர மனித புதை குழியில் மனித எச்சங்களை கண்டுபிடிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது இன்று மேலும் மூன்று மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 20 ந் திகதி திருக்கேதீஸ்வரம் ஆலய பகுதியிலிருந்து மாந்தை பகுதிக்கு குடி நீர் வழங்கல் திட்டத்திற்கு அமைய வீதியோரத்திற்கு அருகாமையில் நிலத்தடி ஊடாக குழாய்கள் பதிக்கும் வேலைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது குறித்த பகுதியில் அகழ்வு வேலைகளின்போது; மனித புதைக் குழி கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இவ் விடயம் மன்னார் நீதிபதியின் கவனத்துக்கு பொலிசாரால் கொண்டுச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து அதே மாதம் 23 ந் திகதி இவ் மனித புதை குழியை அகழ்வு செய்ய மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி செல்வி ஆனந்தி கனகரட்ணம் உத்தரவுட்டிருந்தார்.
அன்றிலிருந்து கடந்த 31.01.2014 வெள்ளிக் கிழமை வரை 19 தடவைகள் இவ் மனித புதை குழியில் மன்னார் நீதிபதி செல்வி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையிலும் அனுராதப்புரம் சட்ட வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி டீ.எல்.வைத்தியரத்தின தலைமையிலும் இவ் அகழ்வுப் பணி இடம்பெற்றன.
இதன்போது 31.01.2014 வெள்ளிக்கிழமைவரை 54 மண்டையோடுகளும் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டிருந்ததுடன் கண்டுபிடிக்கப்பட்டவற்றில் 28 மனித எலும்புக் கூடுகள் இக் குழிக்குலிருந்து வெளி எடுக்கப்பட்டு பெட்டியில் பாதுகாப்பான முறையில் அடைக்கப்பட்டு நீதிபதியின் முன் ஆஐர்படுத்தப்பட்ட நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையின் ஒரு பிரத்தியேக அறையில் ஆய்வுக்கு கொண்டுச் செல்வதற்காக பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டது
இந்நிலையில் மீண்டும் ஒன்பது தினங்களுக்குப் பின் இன்று (10) அன்று 20 வது தடவையாக இவ் மனித புதைக் குழி அகழ்வு மன்னார் நீதிபதி செல்வி கே.ஆனந்தி முன்னிலையில் சட்ட வைத்திய நிபுனர் வைத்திய கலாநிதி டீ.எல். வைத்தியரத்தின தலைமையிலான குழுவின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.இதன்போதே குறித்த பகுதியில் புதிதாக மூன்று எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட ஏலும்புக்கூடுகளில் மூன்று எலும்புக்கூடுகள் இன்று புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்டு மூன்று பெட்டிகளில் பொதிசெய்யப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
இன்நிலையின் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகளின் எண்ணிக்கை 31 அதிகரித்தள்ளது குறிப்பிடத்தக்கதுஇதேவேளை நாளை குறித்த மனித எச்சங்களை தேடும் பணி தொடரவுள்ளது.
திருக்கேதீஸ்வர புதைகுழியின் எலும்புக்கூடுகளிண் எண்ணிக்கை 57ஆக உயர்வு
Reviewed by Author
on
February 10, 2014
Rating:

No comments:
Post a Comment