அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்களுக்கு அதே இடத்தில் காணி வழங்குவதற்கு நடவடிக்கை. ப.சத்தியலிங்கம்.

வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்களுக்கு அதே இடத்தில் காணி வழங்குவதற்கு
தொடர்புடைய அதிகாரிகளுடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என்று வட மாகாண சுகாதார அமைச்சர் ப . சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார் . கடந்த 30 ஆம் திகதி வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி முகாமுக்கு சென்றிருந்த அமைச்சர் மக்களின் நிலைமைகளை நேரடியாகப் பார்வையிட்டு அவர்களுடன் கலந்துரையாடிய போதே இதனைத் தெரிவித்துள்ளார் .

கடந்த 32 வருடங்களாகக் குறித்த நலன்புரி முகாமில் தற்காலிக வீடுகளை அமைத்து வாழ்ந்து வரும் 180 குடும்பங்களை அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பாகத் தகவல் அறிந்த மக்கள் வடமாகாண சுகாதார அமைச்சருக்கு இது தொடர்பாக தெரியப்படுத்தியதை அடுத்து குறித்த மக்களுடன் அமைச்சர் சந்தித்துக் கலந்துரையாடினார் .

இந்த நலன்புரி முகாமில் வசிக்கும் குடும்பங்களை அவர்களின் விருப்பத்துக்கு மாறாக வேறு இடங்களில் குடியமர்த்த முடியாது . உள்ளக இடம் பெயர்ந்தோருக்கும் இந்தியாவில் இருந்து மீளத் திரும்பிய வர்களுக்கும் என இந்த இடைத் தங்கல் முகாம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது .

இந்த முகாமில் தங்கியுள்ள 180 குடும்பங்கள் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வரும் நிலையில் வேறு இடங்களில் குடியமர்த்துவது இவர்களின் வாழ்வாதார நடவடிக்கைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் . எனவே இது தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடி முடிவெடுப்பதாக அமைச்சர் அங்கு கூறியுள்ளார் .

வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்களுக்கு அதே இடத்தில் காணி வழங்குவதற்கு நடவடிக்கை. ப.சத்தியலிங்கம். Reviewed by NEWMANNAR on February 03, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.