அண்மைய செய்திகள்

recent
-

இறந்து போன மற்றும் காணாமல் போன உறவுகளுக்கான பிரார்த்தனை மாந்தை லூர்த்து மாதா ஆலயத்தில்-படங்கள்

மன்னார் மாந்தை லூர்த்து மாதா ஆலயத்தின் திருவிழாவிற்கான கொடிஏற்றம் நேற்று மாலை நடைபெற்றது
இதன் போது திருப்பலியினை அருட்தந்தை நேவின்ஸ் பீரிஸ், அருட்தந்தை மில்ட்டன் தேவராஜ், அருட்தந்தை ஸ்டிவன் உட்பட அருட்தந்தையர்கள் பலர் திருப்பலியினை ஒப்பு கொடுத்தனர்.
இத் திருப்பலி குறிப்பாக யுத்தத்தினால் இறந்த மற்றும் காணாமல் போன உறவுகளை நினைவுகூர்ந்து அவர்களின் ஆன்மா சாந்திக்கான பிரார்த்தனை விசேடவிதமாக ஒப்பு கொடுக்கப்பட்டது.
இதன்போது குறித்த ஆராதனையில் கலந்து கொண்ட 100கும் மேற்பட்ட இறைபக்தர்கள் இறந்துபோன மற்றும் காணாமல்போன உறவுகளை நினைவுகூர்ந்து அவர்களின் ஆன்ம சாந்திக்காக இறைவனை மன்றாடினர்.
திருப்பலியை தொடர்ந்து தேவ நற்கருணை ஆசீர்வாதம் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையினால் வழங்கிவைக்கப்பட்டது.
அதன்பின் ஆயர் அவர்களின் விசேட உரை இடம்பெற்றது








இறந்து போன மற்றும் காணாமல் போன உறவுகளுக்கான பிரார்த்தனை மாந்தை லூர்த்து மாதா ஆலயத்தில்-படங்கள் Reviewed by Author on February 14, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.