அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப்போட்டிகள்..

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள் 12-02-2014 புதன் கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

நிகழ்விற்கு கல்லூரியின் அதிபர் அருட் சகோதரர் ஜோசப் ஒகஸ்டின் அவர்கள் தலைமை தாங்கினார் பிரதமவிருந்தினராக வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிபம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் சிறப்பு  விருந்தினர்களாக ஏ.எஸ்.ஆர்.ப்ரிமுஸ் சிறைவா வடக்குமாகாண சபை உறுப்பினர் அவர்களும் வைத்தியர் ஜி.குணசீலன் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அவர்களும் ரிப்கான் பதியுதீன் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அவர்களும்  அயூப் அஸ்மின் வடக்கு மாகாணசபை உறுப்பினர்  அவர்களும் எச்.எம்.ரைய்ஸ் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அவர்களும் கலந்து நிகழ்வைசிறப்பித்தனர்.

விசேட விதமாக இதுவரை மன்னார் மாவட்ட பாடசாலைகளில் இல்லாதவாறு வடக்கு மாகாணக் கொடி ஏற்றப்பட்டமைகுறிப்பிடத்தக்கது. இக்கொடியினை நிகழ்வின் பிரதம விருந்தினர் கௌரவ வடக்கு மாகாண அமைச்சர் அவர்கள் ஏற்றிவைத்தார்.









மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப்போட்டிகள்.. Reviewed by Author on February 13, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.