அண்மைய செய்திகள்

recent
-

வீடில்லா மக்களின் பிரச்சினைகளை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் றிசாட் பதீயுதின்-படங்கள்

மன்னார் பெரியகடை பகுதியில் குடியிருக்கும் முஸ்லிம் மக்களின் வீடில்லாப்பிரச்சினையை பார்வையிடும் முகமாக வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதீயுதின் திடிர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு குறித்த பகுதிக்கு கடந்த செவ்வாய்கிழமை (11.02.2014) சென்றிருந்தார்.

இதன் போது குறித்த பகுதியில் நீண்ட காலமாக வீடுகள் இன்றி ஒரே வீட்டில் பல குடும்பங்களாக வாழ்ந்து வரும் மக்களை நேரில் கண்டு அவர்களின் வீட்டுப்பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.

இதன் போது குறித்த பகுதியில் வசித்து வரும் மக்கள் தமக்கும் இந்திய வீட்டுத்திட்த்தின் ஊடாக வீடுகளை கட்டுவதற்கு ஆவணம் செய்து தரும்படி கேட்டுக்கொண்டனர்.

குறித்த மக்களின் வேண்டுகோள்களை கவனத்திலேடுத்துக்கொண்ட அமைச்சர் குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்





வீடில்லா மக்களின் பிரச்சினைகளை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் றிசாட் பதீயுதின்-படங்கள் Reviewed by Author on February 14, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.