மன்னார் மனித புதைகுழி; எச்சங்களை இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்ப உத்தரவு
மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் உள்ளிட்ட தடயப் பொருட்களை இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் மனித புதைகுழி தொடர்பான விசாரணைகள் நேற்று இடம்பெற்றதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் சேசாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவிற்கமைய, வெகு விரைவில் மனித எச்சங்களை இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பில் கடந்த 05 ஆம் திகதி நடத்தப்பட்ட விசேட கலந்துரையாடலை அடுத்து, மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆனந்தி கனகரட்னத்தின் உத்தரவிற்கமைய மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
திருக்கேதீஸ்வரம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழியில், கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் கட்டம் கட்டமாக 32 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் 80 மனித மண்டை ஓடுகள் உள்ளிட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மனித புதைகுழி; எச்சங்களை இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்ப உத்தரவு
Reviewed by NEWMANNAR
on
March 12, 2014
Rating:

No comments:
Post a Comment