தலைமன்னாரில் கைதான இந்திய மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்செய்யப்படவுள்ளனர்.
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்கள் நேற்று பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது சுகயீனம் காரணமாக 3 மீனவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதனிடையே இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் நெடுந்தீவு கடலில் கைதான 53 தமிழக மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
இவரக்ள் , 13 மீன்பிடி படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டதை அடுத்து ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் எஸ். லெனின்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்ட பணிப்பாளர் என். கணேசமூர்த்தி தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை, எதிர்வரும் 25 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
தலைமன்னாரில் கைதான இந்திய மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்
Reviewed by NEWMANNAR
on
March 21, 2014
Rating:

No comments:
Post a Comment