மன்னார் இணையத்தின் (Newmannar.com) அனுசரணையுடன் தழல் இலக்கியவட்டத்தின் மகளிர் தின நிகழ்வு - காணொளி இணைப்பு
மன்னார் தழல் இலக்கிய வட்ட இலக்கியத் தோழர்கள் ஏற்பாடு செய்திருந்த மகளிர்தின நிகழ்வானது 16/03/2014 காலை 10 மணிக்கு கலைஅருவி மண்டபத்தில் இடம்பெற்றது. எழுத்தாளர் வெற்றிச்செல்வியின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக வருகை நேர விரிவுரையாளர் பண்டிதர்.ம.ந.கடம்பேஸ்வரன், செல்வி.கோதை பரதலோஜினி (தமிழ் ஆசிரியர் – மன்/உயிலங்குளம் றோ.க.த.க.பாடசாலை), திருமதி.வதனி (கலாச்சார அலுவலர்), செல்வி ஜெயசீலி (இசை ஆசிரியர் – மன்/ புனித சவேரியார் பெண்கள் கல்லூரி), ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். .
கவிஞர் மயூரனின் தலைமையில் மகளிர்தினக் கவியரங்கம் இடம்பெற்றது.
மன்னார் பரத கலாலயா நாட்டியப் பள்ளி மாணவர்களால் ஒயிலாட்டம் மிகச்சிறந்த சமுதாயக் கருத்துக்களைக் கொண்டதாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மன்/புனித சவேரியார் கல்லூரி மாணவி செல்வி.நிசா “ மகளிருக்கு எதிரான வன்முறைகள்” பற்றிய உரையையும், தலையுரையை எழுத்தாளர் வெற்றிச் செல்வியும் ஆற்றினர்.
. மன்னார் அமுதனும், வெற்றிச்செல்வியும் நெறிப்படுத்திய இந்நிகழ்வில் www.newmannar.com செய்தித்தளத்தின் அனுசரணையுடன் மாணவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் பரிசுகள் வழங்கப்பட்டன.
மன்னார் இணையத்தின் (Newmannar.com) அனுசரணையுடன் தழல் இலக்கியவட்டத்தின் மகளிர் தின நிகழ்வு - காணொளி இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
March 22, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment