அண்மைய செய்திகள்

recent
-

இந்திய மீனவர்கள் 32 பேர் கைது

யாழ். நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும்  இந்திய மீனவர்கள் 32 பேரை காங்கேசன்துறை கடற்படையினர் திங்கட்கிழமை  (03) இரவு கைதுசெய்ததாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி  தெரிவித்தார்.

இந்தியாவின் நாகப்பட்டிணம், ஜெகதாப்பட்டிணம் ஆகிய பகுதிகளிலிருந்து 08 படகுகளில் வந்தவர்களே கைதுசெய்யப்பட்டனர். 

இவர்களை யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ள நிலையில், நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04)  ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.  
இந்திய மீனவர்கள் 32 பேர் கைது Reviewed by NEWMANNAR on March 04, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.