அண்மைய செய்திகள்

recent
-

56 ஆசனங்களுடன் மேல் மாகாண சபையிலும் ஆளும் கட்சி வெற்றி

மேல் மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மொத்தமாக மூன்று மாவட்டங்களிலும் 56 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சி 28 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஜனநாயகக் கட்சி 9 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன், ஜே.வி.பி. 6 ஆசனங்களையம், ஜனநாயக மக்கள் முன்னணி 2 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2 ஆசனங்களையும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 582,668 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 23 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 249,220 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 10 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஜனநாயகக் கட்சி 88,557 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 4 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஜே.வி.பி. 56,405 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 2 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 17,296 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 1 ஆசனத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 337,924 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 13 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 144,924 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 06 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஜனநாயகக் கட்சி 43,685 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 2 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஜே.வி.பி. 25,366 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 1 ஆசனத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 443083 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 18 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 285538 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 12 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஜே.வி.பி. 74,437 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 3 ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

ஜனநாயகக் கட்சி 71,525 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 3 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஜனநாயகக் மக்கள் முன்னணி 44,156 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 2 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 20,163 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 1 ஆசனத்தைப்; பெற்றுக்கொண்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 15,491 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 1 ஆசனத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.
56 ஆசனங்களுடன் மேல் மாகாண சபையிலும் ஆளும் கட்சி வெற்றி Reviewed by NEWMANNAR on March 30, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.