கிளிநொச்சியில் வறிய 100 மாணவர்களுக்கு வழங்கிவைப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மாணவர்கள் 100 பேருக்கு சைக்கிள்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
கிளிநொச்சி இராணுவ ஒத்துழைப்பு மையத்தின் ஊடாக ஏசியன் பவுண்டேசன் நிறுவனத்தின் நிதியுதவியுடன் தலா 15,000 ரூபா பெறுமதியான சைக்கிள்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டன.
கிளிநொச்சி ஒத்துழைப்பு மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை கிளிநொச்சி இராணுவ ஒத்துழைப்பு மையம் படிப்படியாக நிவர்த்தி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் வறிய 100 மாணவர்களுக்கு வழங்கிவைப்பு
Reviewed by NEWMANNAR
on
March 30, 2014
Rating:
+copy.jpg)
No comments:
Post a Comment