அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியில் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம்; சந்தேகநபர் தப்பியோட்டம்

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு தப்பியோடிய சந்தேகநபர் ஒருவரை தேடி விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சந்தேகநபரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்வதற்காக பொலிஸ் குழுவொன்று நேற்று பிற்பகல் தர்மபுரம் பகுதி வீடொன்றிற்கு சென்றிருந்ததாக பொலிஸ் ஊடக்ப்பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

அந்த சந்தர்ப்பத்தில் சந்தேக நபர் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து தப்பியோடிய சந்தேக நபரை தேடி பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
கிளிநொச்சியில் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம்; சந்தேகநபர் தப்பியோட்டம் Reviewed by NEWMANNAR on March 14, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.