மன்னார் பிரதேச மத்தியஸ்த சபை சனிக்கிழமைகளில் கூடும்-எஸ்.பிரின்ஸ்டயஸ்
மன்னார் பிரதேச மத்தியஸ்த சபை எதிர்வரும 15 ஆம் திகதி முதல் சனிக்கிழமைகளில் கூடும் என மத்தியஸ்த சபைத் தவிசாளர் எஸ்.பிரின்ஸ்டயஸ் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் ஒவ்வொரு ஞாயிறு தினங்களிலும் கூடிய மத்தியஸ்த சபை இனி வருங்காலங்களில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் கூடவுள்ளதால் முறைப்பாட்டாளர்கள், விசாரணையாளர்கள் அன்றைய தினம் சமூகம் அளிக்கும்படி கோரப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 15ஆம் திகதி சனிக்கிழமை மட்டும் மன்னார் மூர்வீதியில் அமைந்துள்ள அல்-அஸ்ஹார் தேசிய பாடசாலையில் அமர்வுகள் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
மன்னார் பிரதேச மத்தியஸ்த சபை சனிக்கிழமைகளில் கூடும்-எஸ்.பிரின்ஸ்டயஸ்
Reviewed by NEWMANNAR
on
March 11, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment