அண்மைய செய்திகள்

recent
-

பிரச்சினைக்குரிய மன்னார் சாவற்கட்டு 30 வீட்டுதிட்டப்பகுதியில் அமைந்திருக்கும் காணி நகரசபையிடம் கையளிப்பு-படங்கள்

மன்னார் சாவற்கட்டு 30 வீட்டுத்திட்டத்தின் முன் உள்ள பிரச்சினைக்குரிய காணி இன்று தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் மன்னார் நகர சபைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

குறித்த காணிக்கான ஆவணங்களை கையளிக்கும் நிகழ்வு இன்றுகாலை 10:30 மணியளவில் மன்னார் நகர சபையில் இடம்பெற்றது.

இதன் போது தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மன்னார் முகாமையாளர் டி. யூட் செல்வராஜா குலாஸ் உத்தியோகபூர்வமாக மன்னார் நகரசபையின் முதல்வர் எஸ். ஞானபிரகாசத்திடம் காணிக்கான ஆவணத்தினை கையளித்தார்.

இதன்போது நகரசபையின் உபதலைவர் ஜேசுதாசன் ஜேம்ஸ் நகரசபையின் உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் மற்றும் நகரசபையின் ஊழியர் எஸ். குமார் ஆகியோர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

குறித்த அரச காணியினை தனியார்களினால் அபகரிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு அவை மன்னார் நகரசபையின் ஊடாக காணி அபகரிப்பு முறியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது


பிரச்சினைக்குரிய மன்னார் சாவற்கட்டு 30 வீட்டுதிட்டப்பகுதியில் அமைந்திருக்கும் காணி நகரசபையிடம் கையளிப்பு-படங்கள் Reviewed by Author on March 13, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.