15 வருடங்களின் பின்னர் பாசிக்குடா – கொழும்பு பஸ் சேவை ஆரம்பம்
மட்டக்களப்பு பாசிக்குடாவிலிருந்து சுமார் 15 வருடங்களின் பின்னர் கொழும்பிற்கான நேரடி இரவு நேர பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இரவு நேர பஸ் சேவை இலங்கை போக்குவரத்து சபையால் நேற்று இரவு 8.30 அளவில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பாசிக்குடாவிற்கு வருகை தரும் உல்லாசப்பயணிகளின் நன்மைகருதி இந்த போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை போக்குவரத்து சபையின் முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.
15 வருடங்களின் பின்னர் பாசிக்குடா – கொழும்பு பஸ் சேவை ஆரம்பம்
Reviewed by NEWMANNAR
on
April 02, 2014
Rating:

No comments:
Post a Comment