மன்னார் அடம்பனில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் திறந்து வைப்பு.- படங்கள்
நெல்சிப் திட்டத்தின் கீழ் 9.1 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாந்தை மேற்கு பிரதேச சபையினால் அடம்பன் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவற்றின் திறப்பு விழா மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவர் எஸ்.வரப்பிரகாசம் தலைமையில் நேற்று(28-06-2014) சனிக்கிழமை மாலை இடம் பெற்றது.
குறித்த நிகழ்விற்கு இணை பிரதம அதிதிகளாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வணிக கைத்தொழில் அமைச்சர் றிஸாட் பதியுதீன் ஆகியோரும்,கௌரவ அதிதிகளாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,சிவசத்தி ஆனந்தன்,வடமாகாண அமைச்சர் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் ஆகியோரும்,சிறப்பு அதிதியாக வடமாகாண சபை உறுப்பினர் சடடத்தரணி ஏ.பிறிமுஸ் சிராய்வா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
முதலில் சிறுவர் பூங்கா வைபவ ரீதியாக இணை பிரதம அதிதிகளாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வணிக கைத்தொழில் அமைச்சர் றிஸாட் பதியுதீன் ஆகியோர் நாடவை வெட்டி திறந்து வைத்தனர்.
-அதனைத்தொடர்ந்து விளையட்டு மைதானம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டதோடு அpதிதிகளினால் ஞாபக சின்னமாக விளையாட்டு மைதானத்தில் மரம் நாட்டப்பட்டது.
பின் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட அணிக்கும்,மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட அணிக்கும் உதைப்பந்தாட்ட போட்டி ஒன்றை வடமாகாண முதலமைச்சர் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
இதன் போது குறித்த இரு அணிகளும் 1:1 என்ற வீதத்தில் சமநிலையில் வெற்றியடைந்தது.
-இதனைத்தொடர்ந்து வருகை தந்த அதிதிகளினால் பாடசாலை மாணவர்கள்,வீரர்கள் ஆகியோருக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் அடம்பனில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் திறந்து வைப்பு.- படங்கள்
Reviewed by NEWMANNAR
on
June 29, 2014
Rating:
No comments:
Post a Comment