அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் உட்பட வட கிழக்கில் போலி முகப்பூச்சு விற்பனை - இருவர் கைது

பிர­பல அழ­கு­சா­தன முகப்பூச்சு நிறு­வ­னத்தின் பெயரில் போலி­யாக தயா­ரிக்­கப்­பட்டு வடக்குஇ கிழக்கு பிர­தே­சங்­களில் முகப்பூச்சுக்கள் (கிறீம்) விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றமை தொடர்­பி­லான பாரிய மோசடி ஒன்றை பொலிஸார் அம்­ப­லப்­ப­டுத்­தி­யுள்­ளனர். வடக்கில்  யாழ்ப்­பாணம், முல்லைத் தீவு, கிளி நொச்சி, மன்னார் ஆகிய பிர­தே­சங்­க­ளிலும் கிழக்கில்  மூதூர் திரு­கோ­ண­மலை மற்றும் மட்­டக்­க­ளப்பு உள்­ளிட்ட பகு­தி­க­ளி லும் இவ்­வா­றாக போலி­யாக தயா­ரிக்­கப்­பட்ட முகப்பூச்­சுக்கள் சந்­தையில் விற்­ப­னைக்கு விடப்­பட்­டுள்­ள­மையை பொலிஸார் கண்­ட­றிந்­துள்­ளனர். 



இந் நிலையில் இந்த மோச­டியுடன் தொடர்­பு­டைய இரு சந்தேக நபர்­களை பொலிஸார் கைது செய்து நேற்றுமுன்தினம் திரு­கோ­ண­மலை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் படுத்­தினர். இந் நிலையில் பிர­பல அழ­கு­சா­தன முகப்பூச்சு தயா­ரிப்பு நிறு­வ­னத்தின் பெயரால் போலி­யாக தயா­ரிக்­கப்­பட்டு சந்­தைக்கு விடப்பட்­டி­ருந்த ஆயி­ரக்­க­ணக்­கான முகப் பூச்சு பக்­கட்­டுக்­களை பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ளனர். 50 கிராம் மற்றும் 100 கிராம் நிறை­கொண்ட இந்த பக்­கட்­டுக்கள் யாழ்ப்­பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் ஆகிய பிர­தே­சங்­க­ளிலும் கிழக்கின் மூதூர், திரு­கோ­ண­மலை மற்றும் மட்­டக்­க­ளப்பு ஆகிய பிர­தே­சங்­களை மையப்­ப­டுத்தி கடைகள், மருந்­த­கங்­களில் விற்­ப­னைக்­காக வழங்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் குறிப்­பிட்­டனர்.

 கைதுசெய்­யப்­பட்­டுள்ள இரு சந்­தேக நபர்­களில் ஒருவர் திரு­கோ­ண­மலை, தம்­ப­ல­காமம் பகு­தியை சேர்ந்­தவர் எனவும் மற்­றை­யவர் மட்­டக்­க­ளப்பை சேர்ந்­தவர் எனவும் குறிப்­பிட்ட பொலிஸார் மிக திட்­ட­மிட்ட முறையில் இந்த மோசடி வர்த்­தகம் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­துள்­ள­தாக சந்­தேகம் வெளி­யிட்­டனர். பொலி­ஸா­ரினால் கைப்­பற்­றப்­பட்­டுள்ள ஆயி­ரக்­க­க­ணக்­கான போலி முகப் பூச்சு பக்­கட்­டுக்­க­ளுக்கும் உண்­மை­யான பக்­கட்­டுக்­க­ளுக்கும் இடையே பல்­வேறு வித்­தி­யா­சங்­களை இதன் போது அவ­தா­னித்­த­தா­கவும் பொலிஸார் குறிப்­பிட்­டனர். இது தொடர்பில் கேச­ரிக்கு தகவல் வழங்­கிய பொலிஸ் அதி­காரி ஒருவர், அசல் பக்­கட்டில் விளம்­ப­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள பெண்ணின் உரு­வத்­திற்கும் போலி பக்­கட்டில் காட்­டப்­பட்­டுள்ள பெண்ணின் உரு­வத்­துக்கும் இடையே நிற வேறு­பா­டு­களை தெளி­வாக அவ­தா­னிக்க முடி­வ­தாக குறிப்­பிட்டார். அத்­துடன் பக்­கட்டில் உள்ள இலச்­சி­னையும் வித்­தி­யா­ச­மாக உள்­ள­தாக குறிப்­பிட்ட அவர் அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள தொலை­பேசி இலக்­கத்­திலும் வேறு­பா­டு­களை காண முடிந்­த­தாக சுட்­டிக்­காட்­டினார். 

குறித்த அசல் முகப்­பூச்சு பக்­கட்­டுக்­களில் அரபு மொழி மூல­மா­கவும் விளக்­கங்கள் எழு­தப்­பட்­டுள்ள நிலையில் போலி பக்­கட்­டுக்­களில் அதனை காண­மு­டி­வ­தில்லை எனவும் பெயர் குறிப்­பிட விரும்­பாத அந்த பொலிஸ் அதி­காரி சுட்­டிக்­காட்­டினார். எவ்­வா­றா­யினும் இது தொடர்பில் பொலி­ஸா­ருக்கு வாக்கு மூலம் அளித்­துள்ள சந்­தேக நபர்கள் இரு­வரும் தாம் இந்த முகப் பூச்சு பக்­கட்­டுக்­களை கொழும்­பி­லி­ருந்தே கொண்டு­வந்து விற்­ப­னைக்­காக சந்­தையில் விட்­ட­தாக குறிப்­பிட்­டுள்­ளனர். 

எவ்­வா­றா­யினும் பொலிஸாரின் தகவல்படி இந்த போலி வர்த்தக நடவடிக்கை காரணமாக யாழ்பாணத்தில் மட்டும் அசல் முகப் பூச்சினை விற்பனை செய்யும் நிறுவனத்துக்கு சுமார் 6 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த போலி வர்த்தகநடவடிக்கைகள் குறித்து பரந்த அளவில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் உட்பட வட கிழக்கில் போலி முகப்பூச்சு விற்பனை - இருவர் கைது Reviewed by NEWMANNAR on July 24, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.