யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் மாணவர் குழுக்களுக்கு இடையே மோதல்
யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளாகத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் மூவர் காயமடைந்துள்ளனர்
வியாபாரக் கற்கைகள் பீடத்தின் இரண்டாம் வருட மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கு இடையே இன்று முற்பகல் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
மோதலில் காயமடைந்த மூன்று மாணவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மாணவி ஒருவரும் அடங்குகின்றார்.
இந்த மோதல் சம்பவத்தை அடுத்து யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்திற்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் மாணவர் குழுக்களுக்கு இடையே மோதல்
Reviewed by NEWMANNAR
on
July 28, 2014
Rating:

No comments:
Post a Comment