தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மூவரிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணை
மலேஷியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மூவரிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மலேஷிய பொலிஸாரால் சந்தேகநபர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் நேற்றிரவு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மலேஷியாவிலிருந்து பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் அழைத்துவரப்பட்ட சந்தேகநபர்கள் தமிழ், முஸ்லிம், மற்றும் சிங்கள இனங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளுடன் இவர்களுக்குள்ள தொடர்பு குறித்து விசாரணைகளின்போது கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் இவர்களுக்கு எதிரான விசாரணை முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைகளை அடுத்து சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என அவர் மேலும் கூறியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மூவரிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணை
Reviewed by NEWMANNAR
on
July 20, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 20, 2014
Rating:


No comments:
Post a Comment