சமயங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பல்' என்னும் தொனிப்பொருளில் மன்னாரில் இப்தார் நிகழ்வு - படங்கள்
நேற்றுமாலை (17.07.2014)6 மணியளவில் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மற்றும் அலுவலக ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் ' சமயங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பல்' என்னும் தொனிப்பொருளில் இப்தார் நிகழ்வொன்று இடம் பெற்றது.
இந் நிகழ்வில் மன்னார் மாவட்ட உலமா சபைத் செயலாளர் ஜனாப் மௌலவி அஸீம் அவர்களும், சாந்திபுரம் விகாராதிபதி வண.விமலரத்ன தேரர் அவர்களும் , எழுத்தூர் பங்குத்தந்தை வண பிதா. செபமாலை அவர்களும் பங்குபற்றினர்.
கௌரவ வடமாகாண சபை உறுப்பினர் ஜனாப். றிப்கான் பதியுதீன் அவர்களும், மன்னார் மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட இணைப்பாளர் ஜனாப். முனவ்வர் அவர்களும் ஏனைய திணைக்கள தலைவர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் எமது பிராந்தியத்திற்குட்பட்ட அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ தலைவர்கள் , உறுப்பினர்கள், செயலாளர்கள் , உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் பி.உ.உ.ஆணையாளர் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். அவரைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட உலமா சபைத் செயலாளர் ஜனாப் மௌலவி அஸீம் அவர்கள், இப்தார் விஷேட சொற்பொழிவினை ஆற்றினார்.இந்நிகழ்வானது மகிழ்ச்சியுடன் மாலை 7 மணியளவில்; இனிதே நிறைவு பெற்றது.
சமயங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பல்' என்னும் தொனிப்பொருளில் மன்னாரில் இப்தார் நிகழ்வு - படங்கள்
Reviewed by NEWMANNAR
on
July 19, 2014
Rating:

No comments:
Post a Comment