மன்னார் நகர சபை கூட்டம் ஒத்திவைப்பு-உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்யவில்லை.
மன்னார் நகர சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற மாதாந்த பொதுக்கூட்டம் இடை நடுவே ஒத்திவைக்கப்பட்டதாகவும், சபை உறுப்பினர்கள் எவரும் சபைக்கூட்டத்தில் இருந்து வெளி நடப்பு செய்யவில்லை என மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.
மன்னார் நகர சபையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் பல நிறைவேற்றப்படவில்லை என கோரி மன்னார் நகர சபையின் உப தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இருதியாக மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் மன்னார் நகர சபைக்கு சொந்தமானதாக காணப்படும் 5 ஏக்கர் காணியினுள் தனி நபர் ஒருவர் அடாத்தாக உற்சென்று துப்பரவு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் குறித்த காணி நடவடிக்கைகள் தொடர்பில் உடனடியாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கடந்த கூட்டத்தில் வழியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் குறித்த பிரச்சினைகள் தொடர்பில் கலந்தாலோசிக்கும் வகையில் சபைக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.
மன்னார் நகர சபை கூட்டம் ஒத்திவைப்பு-உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்யவில்லை.
Reviewed by NEWMANNAR
on
July 23, 2014
Rating:
No comments:
Post a Comment