சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண் இராணுவச் சிப்பாய்கள்
பனாகொடை இராணுவ முகாமிற்கு அருகாமையில் சட்டவிரோதமான முறையில் நடத்திச்செல்லப்பட்ட சூதாட்ட மையமொன்றில் பெண் இராணுவ கோப்ரல் ஒருவரும்ää படைச் சிப்பாய் ஒருவரும் சூதாடிக் கொண்டிருந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் இராணுவ சிப்பாய் மற்றும் உத்தியோகத்தர் தொடர்பில் விசாரணை நடத்துமாறு இராணுவத் தளபதி தயா ரட்னாயக்க, நேற்று இராணுவப் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இராணுவத்தினரின் அனைத்து நடவடிக்கைகளும் இராணுவ ஒழுக்கத்தில் தங்கியுள்ளது.
எனவே இராணுவ ஒழுக்கம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும். இராணுவ ஒழுக்கத்தை மீறும் எந்தவொரு இராணுவ உறுப்பினருக்கும் மன்னிப்பு வழங்கப் போவதில்லை.
சம்பவம் தொடர்பில் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இராணுவத் தளபதி தயா ரட்னாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த 27ம் திகதி கைது செய்யப்பட்ட இராணுவ கோப்ரல் மற்றும் சிப்பாய் உள்ளிட்ட ஏழு பேரும் 28ம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்கள் நாளை ஹோமாகம நீதவான் எதிரில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண் இராணுவச் சிப்பாய்கள்
Reviewed by NEWMANNAR
on
July 30, 2014
Rating:

No comments:
Post a Comment