அண்மைய செய்திகள்

recent
-

மனைவியை கொலை செய்த கணவர் சடலமாக மீட்பு

வவுனியா மகாரம்பைக்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கி, மனைவியை கொலை செய்த கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மகாரம்பைக்குளத்தைச் சேர்ந்த 46 வயதுடைய செல்லையா இராசேந்திரம் என்ற நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஐந்து பிள்ளைகளின் தாயான 38 வயதான தனது மனைவியை குறித்த நபர் நேற்றிரவு 11.30 அளவில் கோடரியால் தாக்கி கொலை செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் குறிப்பிட்டனர். 

 தாக்குதலை தடுப்பதற்கு முயற்சித்த பெண்ணின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தாக்குதலை நடத்திவிட்டு தலைமறைவான கணவர் இன்று காலை காத்தார் சின்னக்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 கொலைசெய்யப்பட்ட பெண் மத்திய கிழக்கு நாடொன்றில் பணியாற்றியவிட்டு நாடு திரும்பியவர் எனவும், குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மனைவியை கொலை செய்த கணவர் சடலமாக மீட்பு Reviewed by NEWMANNAR on July 31, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.