மிதக்கும் ஹோட்டலிலிருந்து வீழ்ந்து ஒருவர் பலி
ஸ்ரீ ஜயவர்தனபுரவிலுள்ள நடாளுமன்ற சிற்றுண்டிசாலையை சேர்ந்த சிலர், பெந்தோட்டை கங்கையிலுள்ள மிதக்கும் ஹோட்டல் ஒன்றுக்கு சென்றிருந்த போது அவர்களில் ஒருவர் கங்கையில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரின் சடலம் 40 நிமிடங்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களியாட்ட நிகழ்வு ஒன்றில் குறித்த நபர்கள் கலந்துகொள்ள சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
மிதக்கும் ஹோட்டலிலிருந்து வீழ்ந்து ஒருவர் பலி
Reviewed by NEWMANNAR
on
July 29, 2014
Rating:

No comments:
Post a Comment