அண்மைய செய்திகள்

  
-

மகளை அடித்து கொலை செய்த தாயொருவருக்கு 10 வருட சிறை

தனது மகளை அடித்து கொலை செய்த தாயொருவருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வீட்டின் சமையலறையில் வைக்கப்பட்டிருந்த பால்மா போத்தலிலிருந்து பால்மாவை தெரியாமல் எடுத்து சாப்பிட்ட மகளை, தாக்கிக் கொலை செய்த தாய் ஒருவருக்கே 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நான்கு வயதான மகளை தடியினால் கொடூரமாக தாக்கியதாக குறித்த பெண் மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டமையினால் குறித்த பெண்ணுக்கு, பலபிட்டிய உயர் நீதிமன்ற நீதவான் மொஹான் செனவிரட்ன, பத்தாண்டு கால கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். 

 ஹிக்கடுவ களுபே என்னும் இடத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார். ரோஹினி டி சில்வா என்ற சிறுமியே சம்பவத்தில் உயிரிழந்திருந்தார். 1998ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மகளை அடித்து கொலை செய்த தாயொருவருக்கு 10 வருட சிறை Reviewed by NEWMANNAR on July 27, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.