தமிழ் ஊடகவியலாளர்கள் பயிற்சி பெறுவதற்கான உரிமை மறுக்கப்படுகின்றது!– தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்
தமிழ் ஊடகவியலாளர்கள் பயிற்சி பெறுவதற்கான உரிமை மறுக்கப்படுவதாக தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினர் ஏ.நிக்சன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு இதழியல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்கள் பயிற்சியில் பங்கேற்பதனை தடுக்கும் நோக்கில் போலிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.
ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி பட்டறைகளை நடத்துவது அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் அல்ல.
கருத்தரங்கில் பங்கேற்க வேண்டாம் என சில ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்
திட்டமிட்ட வகையில் ஊடகவியலாளர்கள் பயணித்த வாகனத்தில் கஞ்சா போதைப் பொருள் போடப்பட்டுள்ளது.
வடக்கிலிருந்து ஊடகவியலாளர்கள் பயிற்சி நெறிகளில் ஈடுபடுவதனை தடுக்கும் நோக்கில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்கள் தைரியத்துடன் பேசி, கொழும்பு வந்தடைந்தனர்.
எனினும், பயிற்சி பட்டறை நடைபெறவிருந்த இடத்தில் நடத்தப்பட்ட போராட்டம் காரணமாக பயிற்சி பட்டறை இடைநிறுத்தப்பட்டது என நிக்சன் தெரிவித்துள்ளார்.
தமிழ் ஊடகவியலாளர்கள் பயிற்சி பெறுவதற்கான உரிமை மறுக்கப்படுகின்றது!– தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்
Reviewed by NEWMANNAR
on
July 27, 2014
Rating:

No comments:
Post a Comment