அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் வைத்தியசாலைக்கு வரும் நோயளர்கள் மன நிறைவோடு திரும்பிச் செல்ல வேண்டும். சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம்

மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலை என்பது மிகவும் முக்கியமான ஒரு வைத்திய சாலையாக திகழ்ந்து வருவதோடு குறித்த வைத்தியசாலை மாவட்டத்தின் தாய் வைத்தியசாலையாக காணப்படுகின்றது.எனவே இவ் வைத்தியசாலையின் பிரச்சினைகளை அறிந்து உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் தெரிவித்தார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நேற்று(18) திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கு சென்றிருந்த அமைச்சர் வைத்தியசாலை அதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,,

 யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மன்னார் மாவட்டமும் அடங்குகின்றது.மாகாணசபை ஊடாக மன்னார் மாவட்டத்தில் உள்ள சில வைத்தியசாலைகளை தரமுயர்த்துவதற்கு ஆலோசித்துள்ளோம். அதே போன்று உயிலங்குளத்தில் ஆரம்ப சுகாதார வைத்திய நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது.எனினும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை என்பது மிகவும் முக்கியமான வைத்தியசாலை. இவ் வைத்திய சாலையில் என்ன பிரச்சினைகள் இருந்தாலும் எமக்கு அறிவிக்க வேண்டும்.இவ் வைத்தியசாலைக்கு வரும் நோயளர்கள் மன நிறைவோடு திரும்பிச் செல்ல வேண்டும். அந்த வகையில் அவர்களுக்கு அந்த சேவை கிடைக்க வேண்டும்.அவ்வாறு இல்லாமல் உரிய சிகிச்சை வழங்கப்படாமல் எவரும் இவ் வைத்தியசாலையில் இருந்து போகக்கூடாது.அதறகு நாம் ஒற்றுமையாக வேலை செய்ய வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.


மன்னார் வைத்தியசாலைக்கு வரும் நோயளர்கள் மன நிறைவோடு திரும்பிச் செல்ல வேண்டும். சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் Reviewed by NEWMANNAR on August 19, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.