அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 'தேவ அழைத்தல்' எனும் கருப்பொருளில் கண்காட்சி-ஆரம்பித்து வைத்தார் மன்னார் ஆயர்-Photo

மன்னார் மடுமாதா சிறிய குருமடம் ஸ்தாபிக்கப்பட்டு 25 வருடங்கள் பூர்த்தியடைவதை எதிர்வரும் 15 ஆம் திகதி கொண்டாடவுள்ள நிலையில் அதனையொட்டி 'தேவ அழைத்தல்' எனும் கருப்பொருளில் கண்காட்சி ஒன்று இன்று(30) சனிக்கிழமை மன்னார் மடுமாதா சிறிய குருமடத்தில் ஆரம்பமானது. 

 இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் ஆரம்பமான குறித்த கண்காட்சியினை மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். குறித்த காண்காட்சியினை மன்னார் மறை மாவட்ட பங்கு மக்கள் ஏற்பாடு செய்துதிருந்தனர். 

குறித்த கண்காட்சியில் காத்தோழிக்க மக்களின் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோடு சிறு நாடகங்களும் அரங்கேற்றப்பட்டது. குறித்த கண்காட்சி இன்று சனிக்கிழமை(30) மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை(31) ஆகிய இரு தினங்களும் காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை இடம் பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிததுள்ளனர். 

 மன்னார் மடுமாதா சிறிய குருமடம் ஸ்தாபிக்கப்பட்டு 25 வருடங்கள் பூர்தியடையும் நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிவிழா கொண்டாடப்படவுள்ளது. 

வெள்ளிவிழா திருப்பலியினை எதிர்வரும் 15ம் திகதி மாலை 5 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தலைமையில் திருவிழா திருப்பலி கூட்டு திருப்பலியாக ஒப்பு கொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.























மன்னாரில் 'தேவ அழைத்தல்' எனும் கருப்பொருளில் கண்காட்சி-ஆரம்பித்து வைத்தார் மன்னார் ஆயர்-Photo Reviewed by NEWMANNAR on August 30, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.