அண்மைய செய்திகள்

recent
-

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஜாக்கி ஜானின் மகன் கைது

சீன அதிபர் ஜி சின்பிங் சட்டவிரோதமாக போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள்,  வைத்திருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டார்.

இதையடுத்து,  நாடு முழுவதும் சீன  பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபகாலமாக போதைப்பொருள் பயன்படுத்தியதாக பல சீன பிரபலங்கள் பொலிஸாரிடம் சிக்கி வருகின்றனர்.

அந்த வரிசையில் பிரபல  நடிகர் ஜாக்கி ஜானின்  மகனும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல நடிகர் ஜாக்கி ஜானின் மகன் நடிகர் ஜெய்சி ஜான் (வயது 31),தைவான் சினிமா நடிகர் கெய் கோ( வயது 23) ஆகியோர்   கடந்த வியாழக்கிழமை (14) கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஜெய்சி ஜான் வீட்டில் இருந்து 100 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேபோல், சினிமா நடிகர் கவோ ஹூ (வயது 40)  போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஜாக்கி ஜானின் மகன் கைது Reviewed by NEWMANNAR on August 19, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.