வாழைச்சேனையில் கொலைச் சம்பவம்; மூன்று பெண்கள் கைது
மட்டக்களப்பு வாழைச்சேனை, மீராவோடை பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலைச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை, காவத்தைமுனை பகுதியை சேர்ந்த 38 வயதான ஒருவரே பொல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வாழைச்சேனையில் கொலைச் சம்பவம்; மூன்று பெண்கள் கைது
Reviewed by NEWMANNAR
on
August 24, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 24, 2014
Rating:


No comments:
Post a Comment