பாற்குட பவனியில் பாற்குடம் தூக்கிய முதலமைச்சர்
வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர, குருணாகல் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கதிரேசன் ஆலய பாற்குட பவனியில் இணைந்துகொண்டு பாற்குடம் தூக்கியுள்ளார்.
நாட்டுக்கு நலன் வேண்டி இந்த பாற்குட பவனி கடந்த வியாழக்கிழமை 14 ஆம் திகதி நடத்தப்பட்டது. இந்த பாற்குட பவனியில் 500 பெண்கள் கலந்து கொண்டனர்.
வேட்டி, வேஷ்டி கட்டி தலைபாகை அணிந்திருந்த வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர, பாற்குடத்தை தலையில் சுமந்து ஆலயத்திற்கு சென்றுள்ளார்.
பாற்குட பவனியில் பாற்குடம் தூக்கிய முதலமைச்சர்
Reviewed by NEWMANNAR
on
August 17, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment