சீரற்ற காலநிலையால் மூவர் மரணம்-அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
சீரற்ற காலநிலை காரணமாக கடந்த சில நாட்களில் மாத்திரம் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று ஞாயிற்றுக்கிழமை (24) தெரிவித்துள்ளது.
தங்கல்லை பிரதேசத்தில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கானவர் உட்பட இருவரும் யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கி ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதே வேளை, மொனராகலை மாவட்டத்தை தாக்கிய வரட்சி மற்றும் கடும் காற்று காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக இந்த நிலையம் சுட்டிக்காட்டுகின்றது.
மொனராகலை மாவட்டத்தில் மாத்திரம் வரட்சி காரணமாக 53,512 குடும்பங்களும் கடும் காற்று காரணமாக 14 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் வரட்சி காரணமாக 36,882 குடும்பங்களும் கடும் காற்று காரணமாக 62 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், கொழும்பு, ரத்மலானை பிரதேசத்தில் கடல் அரிப்பு காரணமாக 85 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் மூவர் மரணம்-அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
Reviewed by NEWMANNAR
on
August 24, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment