ஷாருக்கான் வீட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
மும்பையில் உள்ள நடிகர் ஷாருக் கானின் வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நடிகர் ஷாருக்கானின் நெருங்கிய நண்பரும், படத் தயாரிப்பாளருமான மொரானிக்கு கடந்த சனிக்கிழமை ரவி பூஜாரி என்ற நபரிடமிருந்து வந்த மிரட்டலை அடுத்தே ஷாருக்கானின் வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த நபர் மொரானியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஒரு கோடி பணம் கேட்டுள்ளதோடு, ஷாருக் கானையும் மொரானியையும் கொலை செய்யப் போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு 10.30 அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மூவர் மும்பையில் உள்ள மொரானியின் வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் வீட்டில் எவரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே மொரானி வீட்டின் மீதான தாக்குதல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் சல்மான்கான், அக்ஷய் குமார், பர்கான் அக்தர் ஆகியோரையும் ரவி பூஜாரி இதுபோன்று மிரட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஷாருக்கான் வீட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
Reviewed by NEWMANNAR
on
August 27, 2014
Rating:

No comments:
Post a Comment