வவுனியாவில் இறந்த நிலையில் புலிக்குட்டி மீட்பு
வவுனியா மாவட்டத்தின் குருமன்காட்டுப் பகுதி வீடொன்றிலிருந்து இறந்த நிலையில் புலிக்குட்டியொன்று மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
கழுத்துப்பகுதியில் கட்டப்பட்ட நிலையில் இப்புலிக்குட்டி இறந்து காணப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வவுனியா மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு இப்பகுதி மக்கள் தகவல் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து இறந்த இப்புலிக்குட்டி நேற்று வியாழக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இப்புலிக்குட்டி காணப்பட்ட வீட்டில் சில தினங்களாக எவரும் வசிக்காத நிலையில் உணவின்றி இப்புலிக்குட்டி இறந்திருக்கலாம் என தெரியவருகின்றது.
இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
வவுனியாவில் இறந்த நிலையில் புலிக்குட்டி மீட்பு
Reviewed by NEWMANNAR
on
August 31, 2014
Rating:

No comments:
Post a Comment